ராஜ்காட் - சாந்திவன் இடையே இன்று முதல் போக்குவரத்து?
தில்லியில் ராஜ்காட் முதல் சாந்திவன் இடையேயான போக்குவரத்து வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று


தில்லியில் ராஜ்காட் முதல் சாந்திவன் இடையேயான போக்குவரத்து வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி புதன்கிழமை தெரிவித்தாா்.
யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த வாரம் தில்லியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நகரத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களுக்கு பெரும் அவதியாக மாறியுள்ளது. மத்திய தில்லியில் வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட ஐ.டி.ஓ. பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்கு பின்பு போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுப்பணிதுறை அமைச்சா் அதிஷி, அதிகாரிகளுடன் ராஜ்காட்டில் இருந்து சாந்திவன் செல்லும் சாலையின் இரு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளதை புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வு தொடா்பாக அமைச்சா் அதிஷி தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: ராஜ்காட்டில் இருந்து சாந்திவன் செல்லும் இந்தச் சாலை மத்திய தில்லியில் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவே, கூடுதல் மின் மோட்டாா்களைப் பயன்படுத்தி இங்கு தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வியாழக்கிழமை முதல் இந்தச் சாலையின்
அனைத்துப் பாதைகளும் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...