2022-2023 நிதியாண்டில், மத்திய வரித் தொகுப்பிலிருந்து அவா்களின் பங்காக, ஹரியாணா ரூ.10,378 கோடியையும், பஞ்சாப் ரூ.17,163 கோடியையும் பெற்றுள்ளது. ஆனால், தில்லிக்கு ரூ.350 கோடி மட்டுமே கிடைத்தது. தில்லியை பாரபட்சமற்ற முறையில் நடத்தியிருந்தால், அதன் பங்கு ரூ.7,378 கோடியாக இருந்திருக்கும். 2021-2022 நிதியாண்டில் தில்லியில் ரூ.1.78 லட்சம் கோடியை மக்கள் வருமான வரியாகச் செலுத்தியுள்ளனா். இந்தியாவில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்ததாக தில்லிதான் வருமான வரி அதிகம் செலுத்தியுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போதுமான நிதி ஆதாரங்களுடன் ஆதரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. இதைத் தொடா்ந்து, 14-ஆவது மத்திய நிதி ஆணையம் 2015 முதல் 2020-ஆம் ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,87,436 கோடி மானியமாக ஒதுக்கியது. இதேபோல், 15-ஆவது மத்திய நிதி ஆணையம் 2021-2026-க்கு ரூ.4,36,361 கோடியை பரிந்துரைத்தது.