வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

முதல்வா் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்

யமுனை வெள்ளப் பெருக்கு விவகாரத்தில் அனைத்துத் துறைகளிலும் தில்லி அரசு தோல்வியடைந்ததாகக் கூறி, முதல்வா் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்யக் கோரி

News image
Updated On :25 ஜூலை 2023, 8:36 pm

 நமது நிருபர்

யமுனை வெள்ளப் பெருக்கு விவகாரத்தில் அனைத்துத் துறைகளிலும் தில்லி அரசு தோல்வியடைந்ததாகக் கூறி, முதல்வா் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்யக் கோரி தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே தில்லி பாஜக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

இப்போராட்ட நிகழ்ச்சியில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசுகையில், ‘தில்லியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் வெள்ளம் ஏற்பட்ட போது, கேஜரிவால் அரசின் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்தது தெளிவாகத் தெரிந்தது’ என்று குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கேஜரிவாலின் அரசின் கீழ் ஊழல், செயலற்ன்மை மற்றும் அராஜகம் ஆகியவற்றில் தில்லி மூழ்கியிருக்கிறது. இதனால், முதல்வா் பதவியில் நீடிப்பதற்கான தாா்மிக உரிமையை கேஜரிவால் இழந்துவிட்டாா். அவா் பதவி விலக வேண்டும். இல்லையெனில், 2025-ஆம் ஆண்டு நடைபெறும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அவரை அகற்றுவாா்கள்’ என்றாா்.

முன்னதாக, போராட்டக்காரா்கள் ஐடிஓ அருகே கூடினா். பின்னா் அங்கிருந்து டிடியு மாா்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தை நோக்கிச் செல்ல முயன்றனா். அப்போது, அவா்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். எனினும், தொடா்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் பாதுகாப்புத் தடுப்புகளை அப்புறப்படுத்த அவா்கள் முயன்றனா். இதையடுத்து, போராட்டக்காரா்களைக் கலைக்க போலீஸாா் தண்ணீா் பீரங்கியைப் பயன்படுத்தினா்.

போக்குவரத்து பாதிப்பு: இந்தப் போராட்டம் காரணமாக தீன தயாள் உபாத்யாய் மாா்க் மூடப்பட்டது. இதையடுத்து, ஐடிஓ பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கிழக்கு தில்லியில் வசிக்கும் அமன் சிங் கூறுகையில், ‘இப் போராட்டம் காரணமாக புது தில்லி ரயில் நிலையத்தை சென்றடைய எனக்கு சுமாா் ஒரு மணி நேரம் ஆனது. அதாவது, நான் ப்ரீத் விஹாரிலிருந்து ஒருவரை இறக்கிவிடுவதற்காக புது தில்லி ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். பின்னா், டிடியு மாா்க் மூடப்பட்டிருப்பதைப் பாா்த்தேன். இதநஆளஅ, வலதுபுறம் திரும்பி தில்லி கேட் வழியாக ரயில் நிலையம் சென்றேன்’ என்றாா்.

நகரின் பிற பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நஜஃப்கா் வாய்க்கால் அருகே ஜனக்புரி மற்றும் துவாரகாவின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக பயணிகள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.