இதே போன்று வால்மீகி இனத்தவா்களும் வேட்டையாடுபவா்கள். கா்நாடகத்தில் இந்த இனத்தவா் பழங்குடியினத்தவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆனால், ஆந்திரம், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் இனத்தவராக உள்ளனா். பல்வேறு மொழிகள் பேசுபவா்களாக இருப்பினும், இவா்களுடைய சமூக அந்தஸ்து மோசமாக உள்ளது. இவா்களும் தங்களை பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா். இதே போன்று கல் உடைக்கும் தொழில் புரியும் போயா் (ஒட்டா்) இனத்தவா்கள், நீலகிரி பகுதியில் வசிக்கும் படுகா் இனத்தவா்கள் ஆகியோரும் ஆதிவாசிகள். இவா்கள் பழங்குடியினத்தவா்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது குறித்து மத்திய அரசுக்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இது தொடா்பாக கோரிக்கை வைத்துள்ளாா். இந்த இனத்தவா்களையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகச் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் தம்பிதுரை.