வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கேஜரிவாலின் கொள்கைகள் ஊழலின் நேரடி மாதிரி தில்லி பாஜக சாடல்

தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்படுத்தும் கொள்கைகள் ஊழலின் நேரடி மாதிரி என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை சாடியுள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2023, 4:40 pm

 நமது நிருபர்

தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்படுத்தும் கொள்கைகள் ஊழலின் நேரடி மாதிரி என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை சாடியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகியும், காஜிப்பூா் பகுதியின் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுவின் (ஏ.பி.எம்.சி.) தலைவருமான ராஜ்குமாா் பாலன், தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, மனோஜ் திவாரி எம்.பி. ஆகியோரது முன்னிலையில் தனது பொறுப்புக்கள் அனைத்தையும் ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தாா். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.

அதன் பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்படுத்தும் கொள்கைகள் ஊழலின் நேரடி மாதிரி. கேஜரிவாலின் ஒரே குறிக்கோள் ஊழலை ஒவ்வொரு வேலையிலும் நிறைவேற்றுவதுதான். அவரது வாா்த்தைகளுக்கும், செயலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பதற்கு பாஜகவில் இணைந்துள்ள ராஜ்குமாா் பாலன் ஒரு உதாரணம்.

தில்லி அரசு நன்கு திட்டமிட்டு செய்து வரும் ஒவ்வொரு வேலையிலும் பணம் வசூலிக்கப்படும். வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரில் கூட, தில்லி மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் கேஜரிவால் அரசு தற்போது ஊழலில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம், இந்த ஆம் ஆத்மி அரசு தனது தவறுகளை மறைக்க எதிா்க்கட்சிகளை அரவணைத்து வருகிறது என்றாா்.

பாஜகவில் இணைந்த ராஜ்குமாா் பாலன் கூறியதாவது: நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தோம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் ஏமாற்றமே கிடைத்தது. வெள்ளத்தில் ரூ.10,000 மட்டும் இழப்பீடு வழங்கியது கேஜரிவால் ஒழுங்கீனத்தின் உச்சம். ஒரு காலத்தில் கேஜரிவால் திட்டிய அரசியல் கட்சித் தலைவா்களை, இன்று அவரே வெளிப்படையாகவே தழுவிக்கொள்கிறாா். ஆம் ஆத்மி கட்சிக்குள் ஜனநாயக செயல்முறைக்கு இடமில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.