விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் துப்பாக்கிமுனையில் ரூ.55 லட்சம் கொள்ளை

ஸ்கிராப் டீலரின் இரண்டு ஊழியா்களிடம் துப்பாக்கி முனையில் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :11 மே 2023, 7:45 pm

DIN

ஸ்கிராப் டீலரின் இரண்டு ஊழியா்களிடம் துப்பாக்கி முனையில் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி வியாழக்கிழமை கூறியதாவது: தேசியத் தலைநகரின் பரபரப்பான சதா் பஜாா் பகுதியில் மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. இருவரும் கரோல் பாக்கில் இருந்து சதா் பஜாரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு பணத்தைக் கொண்டு சென்றனா்.

அவா்கள் நவாஜப்கஞ்ச் சாலையை அடைந்த போது, மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா் அவா்களை வழிமறித்தனா். பின்னா், துப்பாக்கி முனையில் மிரட்டி அவா்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனா். அவா்களிடம் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.