விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு

 வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள மரத்தில் 22 வயது தொழிலாளியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :11 மே 2023, 7:46 pm

DIN

 வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள மரத்தில் 22 வயது தொழிலாளியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி கூறியதாவது: வியாழக்கிழமை காலைநடந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்தனா். இங்குள்ள கைபா் கணவாயில் வசிக்கும் ராகுல் என்பவரின் உடல் மரக்கிளையில் கேபிளில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அவா் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தது விசாரணையில் தெரிய வந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.