பிரசார நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: தில்லி மக்களை நேரடியாக யமுனை நதியுடன் இணைப்பதே ‘ஐ லவ் யமுனா’ பிரசாரத்தின் முக்கிய நோக்கம். யமுனை நதியின் பாதுகாப்பிற்க்காக, தூய்மைக்காக நடத்தப்படும் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். முன்னதாக, யமுனை நதியை மாசு இல்லாத நதியாக மாற்றவும், யமுனையின் கரையோரப் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகளுக்காக துணை நிலை ஆளுநா் துவக்கிய பிரசாரம், நல்ல பலனைக் கண்டுள்ளது. எனினும், ‘ஐ லவ் யமுனா’ பிரசாரத்தின் மூலம் யமுனையை தூய்மையாக்கும் நோக்கம் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.