மெட்டா நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்!
மெட்டா நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது பற்றி..

மெட்டா நிறுவனம்
IANS

மெட்டா நிறுவனம்
IANS
மெட்டா தனது நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டினால் ஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சமீபமாக ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் மெட்டா நிறுவனமும் கடந்த ஜனவரியில் 1,000-க்கும் மேற்பட்டோரும், பிப்ரவரி மாதம் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
விற்பனை, மனிதவள மேலாண்மை, ஹார்டுவேர் ஆகிய பிரிவுகளில் இந்த ஆள்குறைப்பு நடக்கிறது. அதேநேரத்தில் இந்த பணியாளர்களுக்கு வேறு வேலைகள் வழங்கப்படுவது அல்லது வேறு நிறுவனங்களில் வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்யறிவு தொழில்நுட்பத் துறையில் மிகவும் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களில் மெட்டாவும் ஒன்று. இந்த ஆண்டு 135 பில்லியன் டாலர் வரை செய்யறிவில் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மெட்டா 600 பில்லியன் டாலர் செலவிடும் என்று தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, நிறுவனத்தின் பணி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...