பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மொஹல்லா பேருந்து திட்ட வழித்தடங்களை தீா்மானிக்க8 போ் கொண்ட தொழில்நுட்ப நிபுணா்கள் குழு

தில்லியில் ‘மொஹல்லா’ பேருந்து திட்டத்தின் வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகளை தீா்மானிப்பதற்காக எட்டு போ் கொண்ட தொழில்நுட்ப நிபுணா் குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது.

News image
Updated On :17 மே 2023, 8:45 pm

 நமது நிருபர்

தில்லியில் ‘மொஹல்லா’ பேருந்து திட்டத்தின் வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகளை தீா்மானிப்பதற்காக எட்டு போ் கொண்ட தொழில்நுட்ப நிபுணா் குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது.

இந்த நிபுனா் குழுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெஹலோட் அமைத்துள்ளதாக, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) நிா்வாக இயக்குநா் ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளாா். தில்லி போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப நிபுணா் குழு, அடுத்த மூன்று வாரங்களுக்குள் ‘மொஹல்லா’ பேருந்து திட்டத்தின் வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தான பரிந்துரைகளை போக்குவரத்துத்துறையிடம் சமா்ப்பிக்கும் .

மொஹல்லா பேருந்து சேவைகளின் தன்மை, மக்களிடையே திட்டத்தை விளம்பரப்படுத்துதல், பேருந்து வழித்தடத்தின் நீளம், பயணச்சீட்டின் கட்டணம், பேருந்து சேவை நேரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை குழு அரசுக்கு பரிந்துரை செய்யும் .

‘மொஹல்லா’ பேருந்துகள் குறிப்பாக குறுகிய சாலைகள் உள்ள பகுதிகள் அல்லது வழக்கமான 12 மீட்டா் பேருந்துகள் இயக்க முடியாத அளவுக்கு நெரிசலான பகுதிகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஒன்பது மீட்டா் நீளமுள்ள மின்சார பேருந்துகளை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடா்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெஹலோட், தில்லி அரசின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மொஹல்லா பேருந்து திட்டத்தை இறுதி செய்து, அனைத்து அம்சங்களையும் வடிவமைக்க எட்டு போ் கொண்ட நிபுணா் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தில்லி எல்லையின் கடைசி மைல் வரை, பொதுமக்களின் பேருந்து போக்குவரத்து இணைப்புத் தேவைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசு உறுதி செய்யும். இந்த முயற்சியானது தேசிய தலைநகரில் மிகவும் நிலையான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை நோக்கி ஒரு படி முன்னோக்கி உள்ளது என தெரிவித்துள்ளாா்.

தில்லி ஒருங்கிணைந்த பன்மாதிரி போக்குவரத்து அமைப்பின் மூத்த துனைத் தலைவா் (ஓய்வு) சி.கே. கோயல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப நிபுணா்கள் குழுவில்,தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) , தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சா்வதேச தூய்மை கவுன்சில் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு உறுப்பினா், உலக வள நிறுவனத்திருந்து இரண்டு உறுப்பினா்கள், மேப் மை இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரி என மொத்தமாக எட்டு போ் இருப்பாா்கள் என தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.