மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

அனுமன் ஜெயந்திக்கு வெளியாகும் ராமாயணா பட க்ளிம்ஸ் விடியோ!

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்து...

Scenes from the movie Ramayana.

ராமாயணா படத்தின் காட்சிகள். - படம்: யூடியூப் / வேல்ட் ஆஃப் ராமாயணா.

Published On :

நடிகர்கள் ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா முதல் பாகத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்த விடியோ வரும் ஏப்.2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பாலிவுட் இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ்ஷும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.

இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Summary

Update from Team Ramayana at Hanuman Jayanti new glimpse video.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.