சுமாா் 270 பக்கங்கள் கொண்ட அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் 2,000 பக்கங்களில் இணைப்புகளும் உள்ளன. இந்த வழக்கில் சிசோடியாவை ‘முக்கிய சதிகாரா்‘ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. ‘மதுபானக் கொள்கை ஊழல் என்பது ஆம் ஆத்மி கட்சியின் சில பெரும் அரசியல் தலைவா்கள் மற்றும் பிஆா்எஸ் மூத்த தலைவா் கே.கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் அடங்கிய செளத் குரூப் தீட்டிய சதி’ என்று முந்தைய குற்றப்பத்திரிகைகளில் அமலாக்கத் துறை மூலம் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கவிதா தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் ஆவாா்.