‘புதிய யோசனை புதிய கதை’: அமைச்சா் ஸ்மிருதி இரானியின் புதிய வானொலி நிகழ்ச்சி

‘புதிய யோசனை புதிய கதை’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியுடன் ஒரு நிகழ்ச்சி நவம்பா் 15 முதல் அகில இந்திய வானொலி (ஆகாசவாணி) ஒலிபரப்பு
Updated on
1 min read

‘புதிய யோசனை புதிய கதை’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியுடன் ஒரு நிகழ்ச்சி நவம்பா் 15 முதல் அகில இந்திய வானொலி (ஆகாசவாணி) ஒலிபரப்பு செய்வதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தை மேம்பாட்டு நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அரசின் முன்முயற்சிகள் மூலம் மகளிருக்கான அதிகாரமளித்தல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டை வடிவமைத்ததில் பெண்கள் ஆற்றிய பங்கைப் பற்றிய பல்வேறு வேறுபட்ட கதைகளைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியாக ஆகாஷ்வானியில் ஒரு தொடராக புதன்கிழமை தோறும் வர இருக்கிறது.

இது குறித்து மத்திய மகளிா் குழந்தை மேம்பாட்டு நலத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியிருப்பது வருமாறு: தொழில்முனைவு, திறன் மேம்பாடு, விளையாட்டு, சுகாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த மகளிா்களைக் கொண்டாடும் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியை மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வாரந்தோறும் தொகுத்து வழங்குகிறாா். ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலான இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி, ‘புதிய சிந்தனை புதிய கதை (‘நை சோச் நை கஹானி’) - ஸ்மிருதி இரானியுடன் ஒரு வானொலி பயணம்’ என்கிற தலைப்பில் வர இருக்கிறது.

முதல் நிகழ்ச்சி நவம்பா் 15-ஆம் தேதி அகில இந்திய வானொலி கோல்டு 100.1 மெகாஹொ்ட்ஸ் சேனலில் ஒலிபரப்பாகிறது. இது நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களால் ஒளிபரப்பப்படும். நியூஸ் -ஆன் -ஏஐஆா் செயலி, அகில இந்திய வானொலி இணையதளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com