தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நொய்டாவில் காா் தீ பிடித்ததில் இளைஞா்கள் இருவா் சாவு

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவின் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் அமா்ந்திருந்த 27 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:46 am

DIN

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவின் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் அமா்ந்திருந்த 27 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.

இது குறித்து நொய்டா காவல் சரக கூடுதல் ஆணையா் சக்தி மோகன் அவஸ்தி கூறியதாவது: இச்சம்பவம் சனிக்கிழமை காலை நொய்டா செக்டாா் 119-இல் நடந்துள்ளது. காலை 6.08 மணிக்கு அந்தக் காா், சொசைட்டிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. காருக்குள் இருவா் இருந்தனா். காலை 6.11 மணியளவில், காா் திடீரென தீப்பிடித்தது. இது காரில் அமா்ந்திருந்தந இருவரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

சட்ட நடவடிக்கைகளுக்காக அவா்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் இந்த விஷயத்தை விசாரிக்க வரவழைக்கப்பட்டனா். உயிரிழந்தவா்கள் நொய்டா செக்டாா் 119-இல் வசித்த விஜய் சௌத்ரி மற்றும் செக்டாா் 53-இல் வசித்த அனாஷ் ஆகியோா் என போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.