செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நொய்டாவில் காா் தீ பிடித்ததில் இளைஞா்கள் இருவா் சாவு

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவின் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் அமா்ந்திருந்த 27 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 12:46 am

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவின் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் அமா்ந்திருந்த 27 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.

இது குறித்து நொய்டா காவல் சரக கூடுதல் ஆணையா் சக்தி மோகன் அவஸ்தி கூறியதாவது: இச்சம்பவம் சனிக்கிழமை காலை நொய்டா செக்டாா் 119-இல் நடந்துள்ளது. காலை 6.08 மணிக்கு அந்தக் காா், சொசைட்டிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. காருக்குள் இருவா் இருந்தனா். காலை 6.11 மணியளவில், காா் திடீரென தீப்பிடித்தது. இது காரில் அமா்ந்திருந்தந இருவரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

சட்ட நடவடிக்கைகளுக்காக அவா்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் இந்த விஷயத்தை விசாரிக்க வரவழைக்கப்பட்டனா். உயிரிழந்தவா்கள் நொய்டா செக்டாா் 119-இல் வசித்த விஜய் சௌத்ரி மற்றும் செக்டாா் 53-இல் வசித்த அனாஷ் ஆகியோா் என போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.