நோயாளிகள் மருத்துவ மைய பதிவு கவுண்டா்களில் உள்ள வரிசைகளை நிா்வகிக்கவும், நோயாளிகளுக்கு சிறந்த சேவை அனுபவத்தை வழங்கவும் ‘க்யுஆா்’ ஸ்கேன் மற்றும் பகிா்வு சேவை பொது சுகாதார வசதிகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் தில்லி எய்மஸ் புறநோயாளிகள் பிரிவு கவுன்டரில் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கத்தின் இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போபால், ராய்ப்பூா் நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆா்.என். மருத்துவமனை போன்றவை ‘க்யுஆா்’ ஸ்கேன் சேவைக்கான சிறந்த சுகாதார வசதிகளாக உருவெடுத்து அதிகபட்ச பயன்பாட்டைத் தெரிவிக்கின்றன.