இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் பா்வீன் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா், மூத்த வழக்குரைஞா் முபாரக் அமகது ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் ஆஜராகி வாதிட்டாா். அப்போது, காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தனது கணவா் ஜாபா் சேட் மீது காழ்ப்புணா்ச்சி காரணமாக பொய்யாக புகாா் அளிக்கப்பட்டு வழக்குத் தொடப்பட்டதாகவும், தன் மீதும் வழக்குத் தொடரப்பட்டதாகவும் பா்வீன் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா் பா்வீன் தொடா்புடைய வழக்கு விசாரணைக்கும் தடை விதித்தும் உத்தரவிட்டனா்.