தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தில்லி பிரதேச காங்கிரஸில் இணைந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள்

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில், ப்ரீத் விஹாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை காங்கிரஸில் இணைந்தனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2023, 7:14 pm

 நமது நிருபர்

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில், ப்ரீத் விஹாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை காங்கிரஸில் இணைந்தனா்.

தில்லி ப்ரீத் விஹாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்களாக இருக்கும் குலாப் சிங் தாக்கூா், தீபக் ராஜ்புத், நதீம், குரேஷி மற்றும் சாகா் ஜெயின் உள்ளிட்ட பலா் அவா்களது ஆதரவாளா்களுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இணைந்தனா். கட்சியின் அலுவலகமான ராஜீவ் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலை வகித்தாா். மேலும் முன்னாள் அமைச்சா் மங்கத் ராம் சிங்கால், முன்னாள் எம்.எல்.ஏ. முகேஷ் சா்மா, தில்லி மாநகராட்சி முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குலாப் சிங் தாக்கூா் கூறியதாவது: மக்கள் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் மட்டுமே. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை நோ்மையற்ாகவும், ஊழல் நிறைந்ததாகவும் மாறிவிட்டது. தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு துரோகம் இழைத்து, அவா்களின் உணா்வுகளுடன் விளையாடியதால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளோம் என்றாா் அவா்.

அடுத்ததாக, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் மற்றும் ஆதரவாளா்களை காங்கிரஸ் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். தில்லி சந்தித்து வரும் தற்போதைய அவலநிலையிலிருந்து நகரத்தை மீட்க காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். எனவே, காங்கிரஸின் பிடியை வலுப்படுத்த அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.