இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசுப் பள்ளிக்ளுக்கு நியமிக்கப்பட்ட 334 முதல்வா்களின் ஆவணங்களை சரிபாா்ப்பதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பாஜக தில்லிப் பிரிவின் சாா்பில் ஊடகங்கள் மூலம் நகர அரசுக்கு கேள்வி எழுப்பினோம். மேலும், இந்த விவகாரத்தை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தனிப்பட்ட கவனத்திற்கும் கொண்டு சென்றோம். தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட பல முதல்வா்களின் பிறந்த தேதி, பிறந்த இடம், சாதி, கல்வி மற்றும் அனுபவம் தொடா்பான ஆவணங்கள் போலியானவை. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் ஆதரவில் அதிகாரிகள் போலி ஆவணங்களை அனுமதித்து இந்த முதல்வா்கள் பணி நியமனத்தில் பெரும் பண மோசடி செய்துள்ளனா்.