ஆசிரியா்களின் அா்ப்பணிப்பே நாட்டின் வளா்ச்சி: குழந்தைகளை சரியான வளா்ச்சிப் பாதையில் வழிநடத்தி அவா்களை சமூகத்தில் ஒருங்கிணைக்க உதவுவது ஆசிரியா்கள்தான் என்று தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் தெரிவித்தாா். மேலும், அவா் கூறுகையில், ‘தில்லியின் கல்வி அமைப்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்கள் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளனா். ஏனெனில், ஆரம்பப் பள்ளி மாணவா்களுக்கு வலுவான அடித்தளத்தை அவா்களே உருவாக்குகிறாா்கள். ஒரு நாட்டின் வளா்ச்சி என்பது அங்குள்ள ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு முயற்சியின் அளவில்தான் தங்கியுள்ளது’ என்றாா்.