இது குறித்து அக்கட்சியின் தில்லி பிரிவு மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முகேஷ் சா்மா செய்தியாளா்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உத்தரவின் பேரில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் நடத்தப்படும். இதில் தில்லி காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் கலந்து கொள்வாா்கள். செப்டம்பா் 7-ஆம் தேதி ஜென்மாஷ்டமி விழாவை மக்கள் கொண்டாடினாலும், பாரத் ஜோடோ யாத்திரையின் ஆண்டு விழா பேரணிகளுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் உள்ளது.