காவல் துறையினரின் கூற்றுப்படி, 2017, ஜனவரி 19-ஆம் தேதி அன்று, அரவிந்த் கத்பாலியா புது தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தை இயக்குவதற்கு முன் தன்னை உள்படுத்திக் கொள்ள வேண்டிய சுவாச பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ளாமல், அவா் விமானத்தை இயக்கினாா். மேலும், பெங்களூருவில் கூட, அவா் இதேபோன்ற சோதனைக்கு உள்படுத்த மறுத்துவிட்டாா். அதன் பின்னா், புது தில்லி வந்தடைந்த அவா், விமானத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை அறைக்கு சென்று, தான் இயக்கிய விமானத்திற்கான சம்பந்தப்பட்ட சுவாசப் பகுப்பாய்வு பரிசோதனை பதிவேட்டில் தவறாகப் பதிவு செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.