ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லி நகரம் முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து நிலைமையும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்றாா் அந்த அதிகாரி. இதேபோல் வடக்கு தில்லி பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த 21 வயது இளைஞா் ஒருவா், ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் பிரகதி மைதான் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பியதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.