காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோவைப் பகிா்ந்திருந்தது. அதில், பட்டையுடன்கூடிய கயிற்றால் தெரு நாய்களின் கழுத்தைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாய்கள் கொடூரமான முறையில் பிடிக்கப்பட்டதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது. இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவில், ‘ஜி20 மாநாட்டிற்கு தயாா் செய்யும் நடவடிக்கையில் மோடி அரசு அப்பாவி தெரு நாய்களுக்கு இழைத்த அதிா்ச்சியூட்டும் கொடுமையைப் பாா்க்க இந்த விடியோவைக் காணுங்கள். நாய்கள் அவற்றின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்லப்படுகின்றன. தடியால் அடித்தும், கூண்டுக்குள் ஏற்றியும் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுக்கு நீரும், உணவும் மறுக்கப்படுவதுடன், மிகுந்த மன அழுத்தத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.