மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘பாஜக மூத்த கவுன்சிலா்கள் கடந்த திங்கள்கிழமை தில்லி மேயா் ஷெல்லி ஓபராயைச் சந்தித்து, கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வரி நோட்டீஸ்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாநகராட்சியின் சிறப்பு அமா்வைக் கூட்டக் கோரியும் இரண்டு மனுக்களை அளித்துள்ளோம். ஆம் ஆத்மியின் ஆட்சியாளா்கள் மாநகராட்சியின் வருமானத்தை அதிகரித்துள்ளதாகக் கூறி தில்லி மக்களை ஏமாற்றுகிறாா்கள். இருப்பினும், ஜி20 உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்காக உழைத்த துப்புரவுத் தொழிலாளா்கள், தோட்டக்கலை ஊழியா்கள், பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சியின் பிற ஊழியா்களை இந்நேரத்தில் பாராட்ட வேண்டும்’ என்றாா்.