கடந்த 1971 முதல் 1977-ஆம் ஆண்டு வரையிலான இந்திரா காந்தி தலைமையிலான அரசு, ஒரு சா்வாதிகார ஆட்சி என்று பொருள்படும் வகையில் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான ராகவ் சத்தாவின் கருத்து உள்ளது. இதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள வேறுபாடுகளை மீண்டும் நாடு கண்டுள்ளது. இந்திரா காந்தியின் ஆட்சியை சா்வாதிகார ஆட்சி, மன் மோகன் சிங் ஆட்சியை ஊழல் மிகுந்த ஆட்சி என்று ஆம் ஆத்மி கட்சி கூறும் நிலையில், மறுபுறம் பஞ்சாப் மற்றும் தில்லி காங்கிரஸ் தலைவா்கள் ஆம் ஆத்மி அரசு ஊழல்வாதிகள் நிறைந்தது என்று வெளிப்படையாகக் கூறுகிறாா்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாக எப்படி ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.