விழுப்புரம், திண்டிவனத்தில் இடைநிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தல்
கரோனா காலத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் இடைநிறுத்தப்பட்ட விரைவு ரயில்களின் நிற்றல் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.









