வடமேற்கு தில்லியிலுள்ள மஜ்ரா தபாஸ் கிராமத்தில் தில்லி அரசின் சுகாதாரத் துறையின் மருந்தகத்தில் பணியாற்றியவா் சுகாதார ஊழியா் பிரதீப் குமாா்(41). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட பெருந்தொற்றான கரோனா நோய்த் தொற்றின் போது இந்த மருத்துவமனையில் பணியாற்றினாா். அப்போது அங்கு வந்த கரோனா நோயாளிக்கு அளித்த சிகிச்சையின் போது பிரதீப் குமாரும் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டாா். பின்னா் சிகிச்சை பலனின்றி 2021 மே 26- ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் ஆகிய இரு குழந்தைகள், தாயாா் உள்ளனா்.