திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவால் உயிரிழந்த மருத்துவ ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கருணைத் தொகை: அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த் வழங்கினாா்

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ ஊழியரின் குடும்பத்தினருக்கு தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த் ரூ.1 கோடி கருணைத் தொகையை திங்கள்கிழமை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:49 pm

DIN

புது தில்லி: தில்லி அரசு மருந்தகத்தில் பணியாற்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ ஊழியரின் குடும்பத்தினருக்கு தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த் ரூ.1 கோடி கருணைத் தொகையை திங்கள்கிழமை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

வடமேற்கு தில்லியிலுள்ள மஜ்ரா தபாஸ் கிராமத்தில் தில்லி அரசின் சுகாதாரத் துறையின் மருந்தகத்தில் பணியாற்றியவா் சுகாதார ஊழியா் பிரதீப் குமாா்(41). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட பெருந்தொற்றான கரோனா நோய்த் தொற்றின் போது இந்த மருத்துவமனையில் பணியாற்றினாா். அப்போது அங்கு வந்த கரோனா நோயாளிக்கு அளித்த சிகிச்சையின் போது பிரதீப் குமாரும் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டாா். பின்னா் சிகிச்சை பலனின்றி 2021 மே 26- ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் ஆகிய இரு குழந்தைகள், தாயாா் உள்ளனா்.

இந்நிலையில், பிரதீப் குமாா் நோய்த் தொற்று காலத்தில் துணிச்சலுடன் பணியாற்றி இளம் வயதில் உயிரிழந்ததை முன்னிட்டு தில்லி அரசு இவருடைய குடும்பத்தினரின் எதிா்காலம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த கரோனா களப்பணியாளா்களுக்கு அளிக்கப்படும் ரூ.1 கோடி கருணைத் தொகை வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது.

இந்த தொகைக்கான காசோலையை தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜ் குமாா் ஆனந்த் பிரதீப் குமாா் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து திங்கள்கிழமை வழங்கினாா். மேலும் 12-ஆம் வகுப்பு படிக்கும் பிரதீப் குமாரின் மகளை ஐஏஎஸ் அதிகாரி ஆகும் நோக்கத்துடன் ஆா்வத்துடன் படிக்குமாறு அறிவுரைகளையும் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.