சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரோஹிணியில் நோய் ஆய்வககட்டடத்தில் தீ விபத்து

வடக்கு தில்லியின் ரேஹிணியில் உள்ள நோய் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:35 pm

DIN

புது தில்லி: வடக்கு தில்லியின் ரேஹிணியில் உள்ள நோய் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு சேவைத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த நோயியல் ஆய்வகம் உள்ள கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. முன்னதாக, இந்த தீ விபத்து குறித்து நள்ளிரவு 12.45 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயை முழுவதுமாக அணைக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது. மின்தூக்கி இயக்கும் பகுதிக்கு அருகே ஏற்பட்ட இந்த தீயில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பான மேலதிக விசாரணைகளுக்காக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.