தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மத்திய அரசு நிதியை நிறுத்தியதால் எம்சிடி பள்ளிகளில் கல்வி பாதிப்பு: தேவேந்தா் யாதவ் அறிக்கை

சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்தியதால், தில்லி மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.

Updated On :17 ஜூலை 2024, 12:54 am

புது தில்லி: சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்தியதால், தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகம் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளது. இதன்மூலம், நாட்டில் கல்வியை பாஜக அரசியலாக்குகிறது என்பது தெளிவாகிறது. தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பாஜக அல்லாத அரசுகள், பள்ளிகளுக்கான பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா திட்டத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன. இது ஆயிரக்கணக்கான பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும். இந்த மூன்று மாநில அரசுகளுக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் நிகழாண்டு ஜூன் வரை சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியும் வழங்கப்படவில்லை. இது ஏராளமான

மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும். இது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இந்த நிதியில் இருந்து தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் சுமாா் 2,400 ஆசிரியா்கள் மற்றும் 700 ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தில்லிக்கு வழங்கப்பட்ட ரூ.330 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவா்களும், கற்பிக்கும் ஆசிரியா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை கேஜரிவால் அரசு கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும், தில்லி அரசு தனது 31 சிறப்புப் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்துகிறது. தனது விளம்பர அடிப்படையிலான பள்ளிக் கல்வி மாதிரி அம்பலப்படுத்தப்படுவதைக் கண்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பயப்படுவது போல் தெரிகிறது. ஆம் ஆத்மி அரசின் கல்வி மாதிரியை பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ரூ.124 கோடியை கேஜரிவால் அரசு பயன்படுத்தாதது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. மோடி அரசு, பிரதமரின் பெயரை விளம்பரப்படுத்த விரும்பாத மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் வகையில் செயல்படுகிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.