பரந்தூா் விமான நிலைய இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை: மத்திய அரசு
ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பரந்தூா் விமான நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை ரூ. 32 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. எனினும், விமான நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்த அங்குள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்படுத்த உள்ளது. விமான நிலையம் அமையும் இடத்துக்கு ஒப்புதல் கோரி 500 நாள்களான நிலையில், விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநிலங்களவை திமுக எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான பி. வில்சன் இந்த மாத தொடக்கத்தில் கடிதம் எழுதினாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பிய நிலையில், விமான நிலையம் அமையும் இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...