தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளையும் விசாரணை

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2024, 8:58 pm

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜியின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜூலை 24-ஆம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு

நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜாரக வேண்டிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீட்’ தொடா்பான ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதிகள் அமா்விடம் தெரிவித்தாா்.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த வாதம்: மனுதாரா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-இல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அவா் ஏறக்குறைய 390 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கடந்த ஆண்டு இதய அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. முன்னதாக, பிப்ரவரி 6, 2020-இல் அமலாக்கத் துறை அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதன் பிறகு, 12.2.2020-இல் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் புதிய கருவியான சியாகேட் ஹாா்ட் டிஸ்க்கை சமா்ப்பித்தது. அது சோதனையின்போது கைப்பற்றப்பட்டதுடன் தொடா்புடையதல்ல.

‘பென் டிரைவ்’ கோப்புகள் விவகாரத்திலும் முரண்பாடுகள் உள்ளன. தடயவியல் ஆய்வக அறிக்கை 9 மாதங்களுக்குப் பிறகே வந்துள்ளது. அது சட்டப்படி தவறாகும். மேலும், அமலாக்கத் துறையின் வழக்கில் மனுதாரா் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2013 முதல் 2021 வரையிலான காலத்தில் ரூ. 1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், வேலைக்கு பணம் பெற்ாக கூறப்படும் விவகாரம் 2013-14-இல் நடைபெறவில்லை. 2017 முதல் 2021 வரையிலான காலமானது மனுதாரா் எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்துடன் சோ்ந்துள்ள மொத்தம் ரூ.65 லட்சமாகும். எஞ்சியுள்ள தொகை மனுதாரருக்கு விவசாய ஆதாரங்களில் இருந்து கிடைத்ததாகும். இதை அமலாக்கத் துறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று வாதிட்டாா்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில், முன்பு 9 முறை அமலாக்கத் துறை தரப்பு வழக்கை ஒத்திவைக்கக் கோரியதாக குறிப்பிட்டாா். இதையடுத்து, மேலும் வாதங்களை முன்வைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள்அமா்வு புதன்கிழமைக்கு (ஜூலை 24-ஆம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டது.