கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
கரூரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி எந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Income Tax Department Raids Senthil Balaji's Friend's House!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள்! வருமான வரித்துறை புதிய விதி!

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



