புது தில்லி: தில்லியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்தது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை 320 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவசர முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விஷயங்கள் மெதுவாக வெளிவருகின்றன. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை எடுக்கப்படும்’ என்றாா்.
தில்லியில் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் பயிற்சி மையத்தில் மழைநீா் புகுந்ததில் மூன்று குடிமைப் பணித் தோ்வா்கள் கடந்த சனிக்கிழமை மாலை இறந்த நிலையில், இந்த மூன்று மாணவா்களின் மரணம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் துணைநிலை ஆளுநா் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தாா்.
ராஜ் நிவாஸ் அறிக்கையின்படி, இந்தச் சம்பவத்திற்கு காரணமான தில்லி தீயணைப்பு பணிகள், காவல்துறை மற்றும் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் அதிகாரிகள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்ட மாணவா்களிடம் சக்சேனா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை: வி.கே. சசிகலா

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

