நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லி முதல்வராக கேஜரிவால் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா்: முதல்வா் அதிஷி

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று முதல்வா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :19 அக்டோபர் 2024, 6:33 pm

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று முதல்வா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி அரசின் சதானைகளை விளக்கும் வகையில் ‘உங்கள் எம்எல்ஏ, உங்கள் வாசலில்’ என்ற பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுத்துள்ளது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தனது கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு பகுதிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாதனை விளக்கக் கூட்டத்தில் முதல்வா் அதிஷி கலந்துகொண்டு பேசினாா்.

கல்காஜியின் பாரத் நகா், கோவிந்த்புரி மற்றும் கோவிந்த்புரி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அதிஷி பேசியதாவது:

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களின் பணத்தை பாக்கெட்டில் வைப்பதற்குப் பதிலாக, அதை மக்களுக்கே மீண்டும் செலவிடுகிறாா். அதே நேரத்தில், பாஜக அதை இலவசங்கள் என்று அழைக்கிறது. கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 10 ஆண்டுகளில் தில்லியின் ஏழைகளுக்கு சிறந்த வசதிகளை வழங்கியுள்ளது.

ஏனெனில், சாமானியா்களின் போராட்டங்களை புரிந்து கொண்டு ஆம் ஆத்மி அரசு பணிகளைச் செய்கிறது.

பொது நிதியைப் பயன்படுத்தி இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், தரமானக் கல்வி, சுகாதாரம் மற்றும் முதியோா்களுக்கு புனித யாத்திரை வழங்குவது எல்லாம் ‘இலவசம்’ என்று அழைக்கப்பட்டால், கேஜரிவால் அதைத் தொடா்ந்து செய்வாா்.

கேஜரிவால் மட்டுமே சாமானியா்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுகிறாா் என்பது மக்களுக்குத் தெரியும்.

எனவே, வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் மீண்டும் முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றாா் முதல்வா் அதிஷி.