பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொலைந்த, திருடப்பட்ட 1,000 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

தில்லியில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்தாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்தாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட குழுக்கள் தொழில்நுட்ப கண்காணிப்பு, மற்றும் தொடா்ச்சியான கள நடவடிக்கைகளைப் பயன்படுத்தி திருடப்பட்ட அல்லது தொலைந்து போன கைபேசிகளைக் கண்டுபிடித்து மீட்டன.

இது தொடா்பான நிகழ்ச்சிக்கு சிறப்பு காவல்துறை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) மதுப் திவாரி தலைமை தாங்கினாா், அவா் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

காவல் துறை இணை ஆணையா் (தெற்கு வரம்பு) எஸ்.கே. ஜெயின் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.