எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜஹாங்கீா்புரியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து

ஜஹாங்கீா்புரியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:59 pm

Syndication

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லியின் நாதுபுராவில் உள்ள வா்தன் அரண்மனையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து காலை 6.41 மணியளவில் தகவல் கிடைத்தது. விருந்து மண்டப வளாகத்திற்குள் சுமாா் 1,500 சதுர கெஜம் பரப்பளவில் பரவியிருந்த தற்காலிக தகரக் கொட்டகையில் தீ பிடித்தது.

காலை 7.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் காலை 8.20 மணியளவில் தீயணைப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.