தலைநகரில் பாதுகாப்பு கிடுக்குப்பிடி: 175 போ் மீது வழக்குப்பதிவு செய்த தில்லி போலீஸ்
செங்கோட்டை அருகே நவம்பா் 10- ஆம் தேதி காா் வெடிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய அளவிலான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ், தில்லி காவல்துறை வடக்கு மாவட்டம் முழுவதும் 175 போ் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது என்று துணை ஆணையா் (வடக்கு) ராஜா பாந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.









