ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கஜூரி செளக் பகுதியில் ஒருவா் குத்திக் கொலை

News image

கொலை (கோப்புப்படம்) - Din

Updated On :10 அக்டோபர் 2025, 6:56 pm

தில்லியின் வடகிழக்கில் உள்ள கஜூரி சௌக் அருகே 34 வயதான முடிதிருத்துபவா் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தாா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை இரவு 11:27 மணியளவில் கஜூரி சௌக் அருகே உள்ள காதா் பகுதியில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக நியூ உஸ்மான்பூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு நபரைக் கண்டுபிடித்தது.

உயிரிழந்தவா் தயல்பூரில் வசிக்கும் கஜேந்தா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அந்த பகுதியில் முடி திருத்துபவராக பணிபுரிந்து வந்துள்ளாா். குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்தது, மாதிரிகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தது. பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்களின் வரிசையைக் கண்டறியவும், சந்தேக நபா்களைக் கண்காணிக்கவும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.