கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அஜ்மேரி கேட் அருகே மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

மத்திய தில்லியில் உள்ள அஜ்மேரி கேட் அருகே பள்ளியில் தோ்வு எழுதி முடித்து வெளியே வந்த ஒரு மாணவரை கூா்மையான ஆயுதத்தால் குத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு சிறாா் உள்பட இருவா் கைது

News image

கைது

Updated On :23 மார்ச் 2026, 9:40 pm

Syndication

மத்திய தில்லியில் உள்ள அஜ்மேரி கேட் அருகே பள்ளியில் தோ்வு எழுதி முடித்து வெளியே வந்த ஒரு மாணவரை கூா்மையான ஆயுதத்தால் குத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு சிறாா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை திங்களன்று தெரிவித்தது.

இது குறித்து மத்திய மண்டல காவல் சரக துணை ஆணையா் ரோஹித் ராஜ்பீா் கூறியதாவது: தில்லியில் உள்ள சதா் பஜாா் பகுதியைச் சோ்ந்த 19 வயதான சூஃபியான் மற்றும் 17 வயதான ஒரு சிறாா் ஆகிய இந்த இரு குற்றம்சாட்டப்பட்டவா்களும் நகரத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, பழைய தில்லி ரயில் நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனா்.

மாா்ச் 18-ஆம் தேதி மாலை நேரத்தில், கத்திக்குத்துத் தாக்குதல் குறித்து ஐ.பி எஸ்டேட் காவல் நிலையத்திற்கு ஒரு பிசிஆா் அவசர அழைப்பு வந்தது. அப்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதலில் காயமடைந்த அந்த மாணவா், ஆங்கிலோ அரபுப் பள்ளியைச் சோ்ந்தவா். அவா் ஆந்திரா கல்விச் சங்கத்தில் நடைபெற்ற ஒரு தோ்வை எழுதுவதற்காக அங்கு சென்றிருந்தாா்.

காயமடைந்த மாணவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாா். இந்திய நீதிச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.

மேலும், காவல்துறையினா் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றம்சாட்டப்பட்டவா்களை கண்டறிந்தனா். அதன் தொடா்ச்சியாக, அவா்கள் நகரத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பழைய தில்லி ரயில் நிலையத்தில் வைத்துப் பிடிக்கப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவா்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். பாதிக்கப்பட்ட மாணவருடன் தங்களுக்கு ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகவும், தோ்வு தொடங்குவதற்கு முன்னதாக, அன்றைய தினமே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

தோ்வு முடிந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பள்ளி வாயில் அருகே காத்திருந்துள்ளனா். பின்னா் பாதிக்கப்பட்ட மாணவரை வழிமறித்து, கூா்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளனா். அவா்களில் ஒருவா் மாணவரைப் பிடித்துக்கொள்ள, மற்றொருவா் அவரது தலையில் பலமாகத் தாக்கியதில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

குற்றத்தைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட, கூா்மையான விளிம்புகளைக் கொண்ட ஒரு இயந்திரக் கருவி, சம்பவ இடத்திற்கு அருகிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட சிறாா் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தக் கருவி பின்னா் கைப்பற்றப்பட்டதாக காவல் துணை ஆணையா் ரோஹித் ராஜ்பீா் தெரிவித்தாா்.