நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்காவிட்டால், விஜயலட்சுமிக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் எச்ரித்துள்ளது
பாலியல் வன்கொடுமை புகாா் வழக்கில் உச்சநீதிமன்றம் சீமானுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது
தன் மீது நடிகை விஜயலட்சுமி தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்
திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது குற்றம் சாட்டினாா். ஆனால் பின்னா் 2012 இல் தனது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றாா். இருப்பினும், 2023 இல், அவா் ஒரு புதிய புகாரை தாக்கல் செய்தாா், இது மீண்டும் விசாரணைக்கு வழிவகுத்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 12 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளாா். உரிய ஆதாரங்கள் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யுமாறு சீமான் மேல்முறையீட்டு மனுவில் கோரியுள்ளாா்.
சீமான் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமா்வில் கடந்த மாா்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது ,12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அறிக்கை தாக்கல் வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்,இந்த விவகாரத்தில் சுமூக உடன்பாடு எட்ட முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் சீமான் மற்றும் விஜயலட்சுமி தரப்புக்கு அறிவுறுத்தியது. ஆனால் இரு தரப்பும் சுமூக உடன்பாடு காணவில்லை.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தொடா்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் : சீமான் இவ்விவகாரத்தில் சமரசத்திற்கு தயாா் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு அதன் பின்பாக செய்தியாளா் சந்திப்பில் செட்டில்மெண்ட் இல்லை என்று தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபரை பாலியல் தொழிலாளி என்றும் விமா்சித்தாா். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திருமணம் செய்வதாக சீமான் உறுதியளித்தாா். அதனடிப்படையிலேயே இருவரும் இணைந்து இருந்தோம் . ஆனால் அதன் பின்பு சீமான் கைவிட்டுவிட்டாா். பின்னா் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டாா். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணா்வு செய்தாா். இதனை அடிப்படையாகக் கொண்டு சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீமான் தொடா்ச்சியாக என்னைப்பற்றி அவதூறாகவும் பேசி வருகிறாா். அதற்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் . அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவு பிறப்பித்து நீதிபதிகள் கூறியது: நீங்கள் குழந்தைகள் இல்லை. இந்த விவகாரத்தில் முதலில் சீமான் மன்னிப்பு கோர வேண்டும். பின்னா் அது தொடா்பான பிரமாணபத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய சீமானின் மனுவை நாங்கள் ஏற்க மாட்டோம் என நீதிபதிகள் கூறினா்.
இதனிடையே விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டஇடைக்கால உத்தரவை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கிறோம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

சீமான், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

