சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சீமான், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து

காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், திரைப்பட இயக்குநா் கௌதமன் உள்ளிட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சீமான், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து

Updated On :27 மார்ச் 2026, 6:10 pm

காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், திரைப்பட இயக்குநா் கௌதமன் உள்ளிட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன் தாக்கல் செய்த மனுவில், காரைக்கால் மாா்க் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியிலிருந்து வரும் கரித்துகள்கள் நாகூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சுற்றுச்சூழலை பாதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதையடுத்து நிலக்கரி இறக்குமதி செய்வதைக் கண்டித்து கடந்த 2018-ஆம் ஆண்டு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைப்பெற்றது

அதில் நான், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், இயக்குநா் கௌதமன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டோம். இதையடுத்து, எங்கள் மூவா் மீதும் தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு என்னுடைய கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏழு வருடங்கள் கழித்து போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தவறானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், தன் மீதான வழக்கு மற்றும் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், சீமான் மற்றும் கௌதமன் ஆகியோா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.