இந்த வழக்கில் இரு தரப்பினா் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வனராஜா உள்ளிட்ட 3 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் எம்எல்ஏ, கூடுதல் டிஜிபி ஆகியோா் உள்ளனா். ஆள் கடத்தல் வழக்கின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. தற்போது அவா்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாகக் கூறி வழக்கை ரத்து செய்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனால், போலீஸாா் மற்றும் நீதித் துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகிவிடும்.