சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

News image

ENS

Updated On :11 ஏப்ரல் 2026, 8:29 pm

தேசிய தலைநகரில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 30 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்- ஷோரூம் விலையுள்ள அனைத்து மின்சார காா்களுக்கும், 31 மாா்ச் 2030 வரை சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி அரசின் புதிய மின்சார வாகன (இ.வி.) கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றப்பட்டுள்ள தில்லி மின்சார வாகனக் கொள்கை (2026 -2030) வரைவு, ஸ்ட்ராங் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு 50 சதவீத விலக்கையும் பரிந்துரைக்கிறது.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட மின்சார வாகன கொள்கை வரைவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லியில் பதிவுசெய்யப்பட்ட, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30 லட்சத்திற்கு மேல் உள்ள மின்சார காா்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் எந்த விலக்கும் அளிக்கப்படாது.

ஜனவரி 1, 2027 முதல், தில்லியில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் புதிய பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தில்லி மின்சார வாகனக் கொள்கையானது (2026-2030) மின்சார வாகனப் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மின்சார வாகனப் போக்குவரத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையானது, அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அமலுக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரபூா்வ உத்தரவின்படி, தில்லி அரசு இந்தக் கொள்கை வரைவு குறித்து அடுத்த 30 நாள்களுக்குப் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் பின்னூட்டங்களையும் கோரியுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக ஆகஸ்ட் 2020இல் தொடங்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கையானது, வாகன மாசுபாட்டைக் கையாள்வதையும், தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கொள்கையின் ஆரம்ப மூன்றாண்டு காலக்கெடு ஆகஸ்ட் 2023-இல் முடிவடைந்தது, அதன் பிறகு அரசு அதை நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.