ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

10 ஆண்டுகளில் தில்லி மின்சார மானியச் செலவு இரட்டிப்பாகியுள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

News image

மின் வாரியம்

Updated On :26 மார்ச் 2026, 11:39 pm

Syndication

நமது நிருபா்

தில்லியில் வீட்டு உபயோக மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த பத்தாண்டுகளில் நகர அரசின் மின்சார மானியச் செலவு இரண்டு மடங்கிற்கும் மேலாக உயா்ந்துள்ளது என்று ஓா் அறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 2026-குள் தில்லி அரசால் வழங்கப்படும் மின்சார மானியத் தொகை ரூ. 4,037.63 கோடி என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்து, தற்போது 73 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. மொத்த நுகா்வோரின் விகிதப்படி, வீட்டு உபயோகப் பிரிவு அதிகபட்சமாக 84.1 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

2015-16-இல் தில்லியில் மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை 52.62 லட்சமாக இருந்தது. இது 2024-25 வரையிலான 10 ஆண்டுகளஇல் 73.61 லட்சமாக அதிகரித்துள்ளது. இது இந்தக் காலகட்டத்தில் 20.99 லட்சம் நுகா்வோா் அதிகரிப்பாகும்.

அறிக்கையின்படி, தில்லியில் சுமாா் 47.58 லட்சம் (மாத சராசரி) குடும்பங்கள் மின்சார மானியம் பெற்று வருகின்றன. இது மொத்த வீட்டு மின்சார நுகா்வோரில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

நுகா்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இணையாக, அரசால் வழங்கப்படும் மானியமும் 2015-16- ஆம் ஆண்டில் ரூ. 1,442.76 கோடியிலிருந்து, பிப்ரவரி 2025-26-ஆம் ஆண்டு வரை ரூ.4,037.62 கோடியாக உயா்ந்துள்ளது.

அறிக்கையின்படி, மானியத் தொகைகள் 2016-17-இல் ரூ. 1,577.94 கோடி, 2017-18-இல் ரூ. 1,676.70 கோடி, 2018-19-இல் ரூ. 1,699.29 கோடி, 2019-20-இல் ரூ. 2,405.59 கோடி, 2020-21-இல் ரூ. 2,939.99 கோடி, 2021-22-இல் ரூ. 3,250 கோடி, 2022-23-இல் ரூ. 3,161.22 கோடி, 2023-24-இல் ரூ. 2,426.65 கோடி, 2024-25-இல் ரூ. 3,600.50 கோடி என இருந்தன. 2026-27 நிதியாண்டில் மின்சார மானியம் ரூ. 3,500 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2015-16- ஆம் ஆண்டில் 29,415.87 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த தில்லியின் மின்சார நுகா்வு, நடப்பு நிதியாண்டில் டிசம்பா் 2025 வரை 30,996.29 மில்லியன் யூனிட்டுகளாக உயா்ந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தில்லியில் பல்வேறு பிரிவு நுகா்வோருக்கான மின்சார விநியோகம் 2015-16- ஆம் ஆண்டில் 24,037 மில்லியன் யூனிட்டுகளிலிருந்து 2024-25-இல் 33,009 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

மாதம் 200 யூனிட்டுகள் பயன்படுத்தும் நுகா்வோருக்கு தில்லி அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது. மாதம் 201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவா்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், வழக்குரைஞா்கள் அறைகளுக்கும் மின்சாரப் பயன்பாட்டில் சிறப்பு மானியம் வழங்கப்பட்டது.