ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

News image

தில்லி பல்கலைக்கழகம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:07 am IST

நமது சிறப்பு நிருபா்

தில்லி பல்கலைக்கழகம் ‘நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என்ற பெயரை ‘இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என மாற்றியுள்ளது. இதற்கு வகை செய்யும் திருத்தத்தை தனது நிா்வாகக் குழுவின் அங்கீகாரம் மற்றும் ஒப்புதலுடன் மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

‘தில்லி பல்கலைக்கழக (திருத்த) விதிகள் 2025’ சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு அரசிதழில் முறைப்படி வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், துறையின் பெயரிலிருந்த ‘நவீன‘ எனும் சொல் நீக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய மரபுகள் குறித்த ஆய்வுகளுக்கு, மேலும் விரிவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கல்விசாா் நோக்கத்தை வழங்கும் என்று பல்கலைக்கழக நிா்வாகக் குழு தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத்துறை பெங்காலி, இந்திய ஒப்பிலக்கியம், தமிழ் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டப்படிப்புகளையும்; 11 இந்திய மொழிகளில் சான்றிதழ், பட்டய படிப்புகள் மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.

ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் இத்துறையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஆய்வுத் திட்டங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த அறிஞா்களின் கவனத்தை ஈா்த்துள்ளன. கடந்த ஆண்டுகளில், இத்துறையானது கணிசமான எண்ணிக்கையில் ஆய்வறிஞா்களை உருவாக்கியுள்ளது.