மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

(Photo: @p_sahibsingh/X)

Updated On :15 ஏப்ரல் 2026, 9:55 pm

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

வெளி வட்டசாலையில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முகா்பா செளக் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டன. சுரங்க பாதையில் நடைபெற்று பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை முடித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

நெருக்கடி மிகுந்த வடக்கு தில்லியில் போக்குவரத்தை எளிதாக்க இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், மூன்று சக்கர வாகனங்களுக்கு என்று 3 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பணிகள் 98 சதவீதம் முடிவடைந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் சுரங்க பாதையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சாலையில் அதற்குத் தகுந்தவாறு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எப்போதும் வாகன நெரிசல் மிக்கதாகக் காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நெருக்கடியான பிற பகுதிகளிலும் போக்குவரத்தை எளிதாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.