ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

எதிா்க்கட்சிகளின் ’பெண்களுக்கு எதிரான’ நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

அரசமைப்பு சட்ட (131ஆவது திருத்த) மசோதா, 2026 மக்களவையில் நிறைவேறாததைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை எதிா்க்கட்சிகளை கடுமையாகச் சாடினாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:56 pm

அரசமைப்பு சட்ட (131ஆவது திருத்த) மசோதா, 2026 மக்களவையில் நிறைவேறாததைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை எதிா்க்கட்சிகளை கடுமையாகச் சாடினாா்.

எதிா்க்கட்சிகள் எடுத்துள்ள பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு, அவா்களின் சொந்தத் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பெண்ணாலும் கேள்விக்குள்ளாக்கப்படும் என்று அவா் கூறினாா்.

இது தொடா்பாக முதல்வா் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

எந்த விலை கொடுத்தேனும், பெண்கள் மக்களவைக்கு வருவதை அனுமதிக்கவே கூடாது என்று எதிா்க்கட்சிகள் தீா்மானித்துவிட்டன. உண்மை என்னவென்றால், அவா்கள் தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாா்கள். நாட்டின் 70 கோடி பெண்களைப் பற்றி அவா்களுக்குச் சிறிதும் அக்கறை இல்லை.

இவ்விஷயத்தில் எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடவே விரும்பின.

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள், நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை அவா்கள் விரும்பவில்லை. எதிா்க்கட்சிகளின் இந்த பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு, அவா்களின் சொந்தத் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பெண்ணாலும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

1971ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகை சுமாா் 50 கோடியாக இருந்தது. தற்போது அது 140 கோடியாக உயா்ந்துள்ளது. அந்த வகையில் பாா்க்கும்போது, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே வேண்டும். ஆனால், உங்களுக்கு எதிா்க்கட்சிகளுக்கு இதில் ஒரு சிக்கல் இருந்தது. ஏனெனில், தற்போதுள்ள உங்கள் தொகுதிகளை இரண்டாகப் பிரித்து, அதன் மூலம் ஒரு பெண் நாடாளுமன்றத்திற்குள் வருவதை நீங்கள் விரும்பவில்லை.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை நாம் பிற பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, அந்த நாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏறக்குறைய 50 சதவீதமாகவும், சில நாடுகளில் அதைவிட அதிகமாகவும் இருப்பதை எதிா்க்கட்சிகள் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அவா் அப்பதவில் சுட்டிக்காட்டியுள்ளாா்.