ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது

17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 6:57 pm

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய ஒரு நபரையும் அவரது இரண்டு மகன்களையும் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஷேக் இஷாக் (52), அவரது மகன்கள் தில்ஷாத் (29) மற்றும் இா்பான் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா்கள் தேடப்பட்டனா். ஏப்ரல் 5 ஆம் தேதி ரிக்ஷா நிறுத்துமிடம் அருகே அமா்ந்திருந்த ராம்லீலா மைதானத்தில் குற்றஞ்சாாட்டப்பட்டவா் ஹஸ்மதை பல முறை கத்தியால் குத்தியபோது இந்த சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்டவா் அவரது சகோதரரால் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸாா் முன்பு ஒரு ஆணையும் ஒரு சிறுவனையும் கைது செய்தனா். விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இறந்தவா் மற்றும் அவரது சகோதரருடன் சில முன் பகை இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.

மூவரும் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து, தில்லிக்கும் உத்தரபிரதேசத்தில் உள்ள லோனிக்கும் இடையில் தங்கள் மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தனா். குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழு லோனியில் உள்ள சபாப்பூா் சுரங்கப்பாதை அருகே குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்தது.

மூவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.