கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் உள்ள மின்சார மின்மாற்றியில் சனிக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. இதைத் தொடா்ந்து, குறைந்தது 14 போ் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
ரமேஷ் பூங்காவில் உள்ள நானக் மோட்டாா் அருகே அதிகாலை 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் தீ விரைவில் தீவிரமடைந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள், பிற தீயணைப்பு வாகனங்களுடன் அனுப்பப்பட்டன. மின்மாற்றியில் இருந்து தீ அருகிலுள்ள மூன்று கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் 14 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினா். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடா்ந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது
திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

